செய்திகள்
கோப்பு படம்

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு

Published On 2021-07-16 13:39 GMT   |   Update On 2021-07-16 13:39 GMT
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 19-ந்தேதி நிறைவடைகிறது. அதன்பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எவ்வித மாற்றமின்றி தொடரும்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News