அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணியின் கூடுதல் நிர்வாகிகளாகவும், மாவட்டங்களுக்கான அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணியின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகள்:-
இணைச்செயலாளர்கள் - எம்.கண்ணன், எஸ்.பாபு, த.சந்திரன்.
துணைச்செயலாளர்கள் - ஆர்.பழனி, ஆம்னி பஸ் அண்ணாதுரை, எம்.முருகேசன், எஸ்.ஆர்.ஆர்.ராகவன்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி நிர்வாகிகள்:-
மாவட்ட இணைச்செயலாளர்- ஆர்.அழகிரி.
மாவட்ட துணைச்செயலாளர்- ஆர்.கணபதி.
வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி நிர்வாகிகள்:-
மாவட்ட துணைத் தலைவர்கள்- இ.மனோகரன், ஏ.மனோகரன்.
மாவட்ட இணைச்செயலாளர்கள்- கே.பாலசுப்பிரமணியன், பி.தரணி செல்வன், எஸ்.முத்துராமன்.
மாவட்ட துணைச் செயலாளர்கள்- ஜி.ராஜ சேகர், எல்.பெரியசாமி, ஜி.அருண்குமார்.
சென்னை புறநகர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி:-
மாவட்ட இணைச்செயலாளர்- பி.கஜேந்திரன்.
கழக உடன் பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.