செய்திகள்
அனைத்துக் கட்சி கூட்டம்

மேகதாது அணை விவகாரம்... தமிழக அனைத்துக் கட்சி குழு நாளை டெல்லி செல்கிறது

Published On 2021-07-14 12:22 GMT   |   Update On 2021-07-14 12:22 GMT
மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நெல் உற்பத்தி குறையும். இந்த விவரங்களை தமிழக அரசு தொடர்ந்து எடுத்துரைத்தபோதும், கர்நாடக அரசு தனது நிலையில் உறுதியாக உள்ளது. 

இதனையடுத்து மேகதாது அணை விவகாரம் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் மூலம்  மத்திய அரசிடம் நேரில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தின் அனைத்து கட்சி குழு நாளை டெல்லி செல்கிறது. திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள், பிரதமரை சந்தித்து பேச உள்ளனர். அப்போது, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை பிரதமரிடம் கொடுக்க உள்ளனர்.

Tags:    

Similar News