செய்திகள்
கோப்புபடம்

காரிமங்கலம் அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2021-07-12 10:53 GMT   |   Update On 2021-07-12 10:53 GMT
காரிமங்கலம் ஏரிக்கரையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள மாட்லாம்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த குரும்பட்டியை சேர்ந்த பெரியண்ணன் (வயது 37), சந்தோஷ் (31) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 65 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News