செய்திகள்
திருக்கோவிலூர் அருகே முக கவசம் அணியாத பஸ் பயணிகளுக்கு அபராதம்
திருக்கோவிலூர் அருகே முக கவசம் அணியாத பஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே மாடாம்பூண்டி கூட்டுரோடு பகுதியில் தாசில்தார் சிவசங்கரன் முன்னிலையில் தேர்தல் துணை தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி அதில் வருபவர்கள் முக கவசம் அணிந்துள்ளார்களா என்று சோதனை நடத்தினர். அப்போது பஸ்களில் சில பயணிகள் முக கவசம் அணியாமல் வந்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதேபோல் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களில் பலர் முக கவசம் அணியாமல் வந்தனர். அவர்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.