செய்திகள்
சிவி சண்முகம்

தேர்தல் தோல்வி குறித்து கூறியது என் சொந்த கருத்து- சி.வி.சண்முகம்

Published On 2021-07-09 02:59 GMT   |   Update On 2021-07-09 02:59 GMT
பத்திரிகையாளர் சந்திப்பில் தான் சொல்லாத சில கருத்துகளையும் சேர்த்து, சித்தரித்து வெளியிட்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
செஞ்சி:

தமிழக சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு பா.ஜ.க.வே காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பத்திரிகையாளர் சந்திப்பில் நான் சொல்லாத சில கருத்துகளையும் சேர்த்து, சித்தரித்து வெளியிட்டு உள்ளார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கான காரணம் குறித்து எனது சொந்த கருத்தை கூறினேன். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அது அவருடைய சொந்த கருத்து என்றுதான் சொன்னார். அதில் எந்த மாற்றமும் இல்லை. இது தொடர்பாக நாங்கள் பல கருத்துகளை பேசுவோம். ஆனால் எங்கள் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அந்த முடிவின்படி செயல்படுவேன். அதுதான் எங்களது முடிவும். பா.ஜ.க.வினரும் கருத்துகளை கூறி இருக்கிறார்கள். அது அவர்களுடைய கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News