செய்திகள்
திருவையாறு அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி
திருவையாறு அருகே பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே வீரசிங்கம்பேட்டை அண்ணாத்திடலைச் சேர்ந்தவர் ராமன் மகன் கோவிந்தராஜ் (வயது 48). விவசாயக் கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டுத் தோட்டத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த போது அங்கிருந்த நல்ல பாம்பு அவரைக் கொத்திவிட்டது. இதில் மயங்கி விழுந்த கோவிந்தராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கோவிந்தராஜ் இறந்து விட்டார்.
இதுகுறித்து அவரது மகன் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவையாறு அருகே வீரசிங்கம்பேட்டை அண்ணாத்திடலைச் சேர்ந்தவர் ராமன் மகன் கோவிந்தராஜ் (வயது 48). விவசாயக் கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டுத் தோட்டத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த போது அங்கிருந்த நல்ல பாம்பு அவரைக் கொத்திவிட்டது. இதில் மயங்கி விழுந்த கோவிந்தராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கோவிந்தராஜ் இறந்து விட்டார்.
இதுகுறித்து அவரது மகன் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.