செய்திகள்
மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2021-06-25 13:37 GMT   |   Update On 2021-06-25 13:37 GMT
தமிழகத்தில் திங்கட்கிழமை காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில், ஜூலை 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றின் தாக்கம் குறைய குறைய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

வருகிற திங்கட்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவுக்கு வர இருக்கிறது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News