செய்திகள்
கோப்பு படம்

தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று- மத்திய அரசு

Published On 2021-06-25 11:51 GMT   |   Update On 2021-06-25 11:59 GMT
நாடு முழுவதும் 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

டெல்டா வகை வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது. இதன் தாக்கம் குறைந்தபிறகு, டெல்டா பிளஸ் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மகாராஷ்டிரா, மத்திய  பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவி வருகிறது.  

இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 48  பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9  பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News