செய்திகள்
கடைகளுக்கு சீல்

நாமக்கல்லில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 7 கடைகளுக்கு சீல்

Published On 2021-06-25 11:11 GMT   |   Update On 2021-06-25 11:11 GMT
சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 மளிகை கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
நாமக்கல்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாமக்கல்லில் ஊரடங்கு விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சீல் வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று நாமக்கல்-பரமத்தி சாலையில் விதிமுறை மீறிய திறந்து இருந்த நிதி நிறுவன அலுவலகங்கள், ஆட்டோ உதிரிபாக கடை, பேக்கரி உள்பட 7 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோல் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 மளிகை கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News