செய்திகள்
தற்கொலை

காரமடை அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை

Published On 2021-06-24 10:05 GMT   |   Update On 2021-06-24 10:05 GMT
கோவை மாவட்டம் காரமடை அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் மனம் உடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரமடை:

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள ஊக்கையனூரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி பிரியா. இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் நாகராஜன் மனவேதனையில் இருந்தார்.

இதனால் மனம் உடைந்த நாகராஜன், வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News