செய்திகள்
சிப்காட்டில் போக்குவரத்து விதிகளை மீறிய 86 பேர் மீது வழக்கு
முகக்கவசம் அணியாமல் வந்த 15 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீக்கராஜபுரம் சோதனை சாவடி மற்றும் பள்ளேரி ஆகிய 2 இடங்களில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்தது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 86 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் முகக்கவசம் அணியாமல் வந்த 15 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.