செய்திகள்
கொரோனா வைரஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி

Published On 2021-06-23 08:42 GMT   |   Update On 2021-06-23 08:42 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 990-ல் இருந்து 26 ஆயிரத்து 126-ஆக உயர்ந்தது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 25 ஆயிரத்து 990 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 ஆயிரத்து 634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 188 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது ஆண் மற்றும் 77 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 187-ல் இருந்து 190-ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 890 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 136 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 990-ல் இருந்து 26 ஆயிரத்து 126-ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,302 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News