செய்திகள்
கோப்புப்படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 310 பேர் பாதிப்பு

Published On 2021-06-21 19:01 GMT   |   Update On 2021-06-21 19:01 GMT
மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,317 ஆக உயர்ந்தது.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 310 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 428 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 202 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,317 ஆக உயர்ந்தது. இதில் 1,909 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 434 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 67 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,153 உயர்ந்துள்ளது. 441 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News