செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 90.68 அடியாக சரிவு

Published On 2021-06-21 10:18 GMT   |   Update On 2021-06-21 10:18 GMT
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தற்போது கர்நாடகாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

இதனால் அங்குள்ள ஹேமாவதி, கிருஷ்ண ராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

இதன் எதிரொலியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் 1800 கன அடியாக இருந்த நீர்வரத்து, மதியம் நிலவரப்படி 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று அதே நிலையில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

ஒகேனக்கல்லுக்கு வந்த தண்ணீர் இன்னும் மேட்டூர் அணையை அடையவில்லை. மேட்டூர் அணைக்கு இன்று தண்ணீர் 665 கன அடி வீதம் மட்டுமே வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 91.40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 90.68 அடியாக சரிந்தது.

Tags:    

Similar News