செய்திகள்
கவர்னரை வரவேற்ற சபாநாயகர்

ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்

Published On 2021-06-21 08:00 GMT   |   Update On 2021-06-21 08:00 GMT
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்த பின்னர் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது.
சென்னை:

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை பிடித்த பின்னர் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையில் பல்வேறு முக்கிய அம்சங்களை இடம் பெற்றிருந்தன.



இந்நிலையில் 16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் 24ந்தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 24ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் உரைக்கு பதில் உரை வழங்குவார்.
Tags:    

Similar News