செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-06-19 10:46 GMT   |   Update On 2021-06-19 10:46 GMT
வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள காந்தி திருமண மண்டபத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
நொய்யல்:

கரூர் மாவட்டம், புகளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சுகாதாரத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள காந்தி திருமண மண்டபத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா தலைமையில் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டனர். முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட 200 பேருக்கும், 50 முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில், கலந்து கொண்டவர்கள் முககவசம் அணிந்து உள்ளனரா?, சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்று செயல் அலுவலர் கிருஷ்ணவேணி ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News