செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 326 பேர் பாதிப்பு- 3 பேர் பலி

Published On 2021-06-19 10:32 GMT   |   Update On 2021-06-19 10:32 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 326 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியாகினர்.
நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 41,417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்ட பட்டியலில் இருந்து 13 பேரின் பெயர்கள் நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41,430 ஆனது.

இந்தநிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 326 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,756 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 938 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினார்.

இதனிடையே நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 365 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டி, ராசிபுரம் மற்றும் பரமத்திவேலூரில் தலா ஒருவர் வீதம் 3 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்தது.

இதுவரை 38,845 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 2,543 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News