செய்திகள்
அண்ணா அறிவாலயம்

ஜூன் 21-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

Published On 2021-06-18 14:59 GMT   |   Update On 2021-06-18 14:59 GMT
தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 21ம் தேதி காலையில் தொடங்கியதும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார்.
சென்னை:

தமிழகத்தில் 16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கவர்னர் உரைக்குப்பின் அவை ஒத்திவைக்கப்படும். 

அதன்பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கூடி, சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பதை முடிவு செய்வார்கள். 



இந்நிலையில், வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக
 எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அரசின் தலைமைக் கொறடா கோவி செழியன் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். 


இக்கூட்டத்தில், சட்டசபை நிகழ்வுகள் மற்றும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்து பேசப்படுகிறது.
Tags:    

Similar News