செய்திகள்
யூடியூபர் மதன்

யூடியூபர் மதன் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் கொண்டு வரப்பட்டார்

Published On 2021-06-18 14:46 GMT   |   Update On 2021-06-18 14:50 GMT
பல நாட்களாக தலைமறைவாக இருந்த மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்துள்ளனர்.

மதன் என்பவர் தனது யூ டியூப் சேனல்களில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரத்தில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் இளம்பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளை மதன் பேசுவதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பல நாட்களாக தலைமறைவாக இருந்த மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்துள்ளனர்.  


இந்நிலையில் தர்மபுரியில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மதனை இன்று இரவு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.  தற்போது யூடியூபர் மதனை தீவிரமாக போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன் பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News