செய்திகள்
விபத்து பலி

திருவாடானை அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2021-06-18 12:00 GMT   |   Update On 2021-06-18 12:00 GMT
திருவாடானை அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டி:

திருவாடானை தாலுகா சோழகன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அழகையா (வயது55). தையல் தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது தீர்த்தாண்டதானம் பஸ் நிறுத்தம் அருகே நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் படுகாயம் அடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News