செய்திகள்
ஆம்பூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆம்பூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி சிந்தனா (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்களாகிறது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் நேற்று சிந்தனா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிந்தனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிந்தனாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.