செய்திகள்
கும்பகோணம் அருகே கார் மோதி வாலிபர் படுகாயம்
கும்பகோணம் அருகே கார் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே பட்டவர்த்தி கிராமத்தை சேர்ந்த ராஜப்பா மகன் சதன்ராஜ் (வயது28). இவர் கருப்பூர் புறவழிசாலையிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரகரம் அருகே செனற்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் சதன்ராஜ் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.