செய்திகள்
தற்கொலை

விக்கிரவாண்டி அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2021-06-15 14:55 GMT   |   Update On 2021-06-15 14:55 GMT
விக்கிரவாண்டி அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விக்கிரவாண்டி தாலுகா பாதிராப்புலியூரை சேர்ந்தவர் முருகன் (வயது 43), இவருடைய மனைவி வள்ளி (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் சேஷாங்கனூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கியிருந்து கடந்த 4 மாதங்களாக வேலை செய்து வந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் வள்ளி, தனது கணவருடன் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த முருகன், விஷத்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News