செய்திகள்
முககவசம்

சிப்காட் பகுதியில் முக கவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்

Published On 2021-06-14 15:09 GMT   |   Update On 2021-06-14 15:09 GMT
சிப்காட் பகுதியில் ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் நேற்று சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும் நடமாடிய 20 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.

மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 2 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. சிப்காட் பகுதியில் ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்த ஒருவரின் மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News