செய்திகள்
பள்ளி கல்வித்துறை

அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை: ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

Published On 2021-06-14 12:43 GMT   |   Update On 2021-06-14 12:43 GMT
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை ஒரு சுற்றிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ‘‘அனைத்து வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும். பள்ளிகளில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும். 27 மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களுடன் பிற ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் வர வேண்டும்.

கொரோனா தொற்று குறைந்த பிறகு, 11 மாவட்டங்களில் மாணவ்கள் சேர்க்கை நடைபெறும். ஆசிரியர்கள் பள்ளிகளுக்க வருவதற்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் சேர்க்கை விவரம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News