செய்திகள்
ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

Published On 2021-06-14 11:13 GMT   |   Update On 2021-06-14 11:13 GMT
சென்னை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உள்பட 54 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேற்று மாற்றப்பட்ட நிலையில், இன்று 39 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். தலைமை செயலளர் உள்பட முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று 24 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 54 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இந்த நிலையில் இன்று 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். திண்டுக்கல், கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News