செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த செவ்வாய்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த திருவூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை (வயது 72), முனுசாமி (52) ஆகிய இரண்டு பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.