செய்திகள்
கொரோனா தடுப்பூசி

முதுகுளத்தூரில் கொரோனா தடுப்பூசி பணி

Published On 2021-06-13 14:32 GMT   |   Update On 2021-06-13 14:32 GMT
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கோவாக்சின் தடுப்பூசி வந்ததை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது.
முதுகுளத்தூர்:

கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், முகாம்கள் ஆகியவற்றில் போடப்பட்டு வந்த தடுப்பூசி போடும் பணிகள் ஜூன் 7-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டன. இதனால் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கோவாக்சின் தடுப்பூசி வந்ததை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது. இதில் 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. அந்த வகையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டன. முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமில் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Tags:    

Similar News