செய்திகள்
தமிழக அரசு

தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்- தமிழக அரசு உத்தரவு

Published On 2021-06-13 12:05 GMT   |   Update On 2021-06-13 12:05 GMT
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பத்திர பதிவு துறை இயக்குனராகவும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் உள்ள 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன் படி நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சி மற்றும் கிராமப்புற வளர்ச்சித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பத்திர பதிவு துறை இயக்குனராகவும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரை, வேலூர் மாவட்ட ஆட்சியர் ஏ.சண்முகசுந்தரம், வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் லட்சுமி ப்ரியா உள்ளிட்ட 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழக தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags:    

Similar News