செய்திகள்
நன்னிலத்தில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
நன்னிலம் பகுதியில் போலீசார் சோதனையில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டிலை கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நன்னிலம்:
நன்னிலம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரும்பண்ணையூரை சேர்ந்த பாலமுருகன் (வயது 38) என்பவர் மோட்டார் சைக்கிளில் 10-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கபட்டது.
இதையடுத்து மதுப்பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.