செய்திகள்
கைது

நன்னிலத்தில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

Published On 2021-06-13 09:55 GMT   |   Update On 2021-06-13 09:55 GMT
நன்னிலம் பகுதியில் போலீசார் சோதனையில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டிலை கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நன்னிலம்:

நன்னிலம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரும்பண்ணையூரை சேர்ந்த பாலமுருகன் (வயது 38) என்பவர் மோட்டார் சைக்கிளில் 10-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கபட்டது. 

இதையடுத்து மதுப்பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.

Tags:    

Similar News