செய்திகள்
பாவூர்சத்திரம் அருகே கள் விற்றவர் கைது
பாவூர்சத்திரம் அருகே உள்ள தோட்டத்தில் கள் இறக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.
நெல்லை:
பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் முத்து செல்வன் (வயது45). இவருக்கு சொந்தமான தோட்டம் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டை அடுத்த கே.டி.சி. நகரில் உள்ளது.
அங்கு கள் இறக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது தோட்டத்தில் கள் இருந்தது.
இதையடுத்து முத்துசெல்வனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.