செய்திகள்
டீக்கடை

டீக்கடைகளுக்கு அனுமதி- தமிழக அரசு

Published On 2021-06-13 06:26 GMT   |   Update On 2021-06-13 06:26 GMT
கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது.
சென்னை: 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21-ந்தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து டீக்கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். 



இந்த நிலையில் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் டீக்கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

நாளை காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை டீக்கடைகள் செயல்படலாம் என்றும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News