செய்திகள்
கொரோனா வைரஸ்

வல்லம் பகுதியில் ஒரே நாளில் 51 பேருக்கு கொரோனா

Published On 2021-06-12 09:48 GMT   |   Update On 2021-06-12 09:48 GMT
கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகளில் தீவிரமாக சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் குழு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

வல்லம்:

வல்லம் பகுதியில் நேற்று ஒரே நாளில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வல்லம் வட்டார சுகாதார அலுவலர் (பொ) டாக்டர் அகிலன், சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேலு உள்ளிட்ட அலுவலர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்ட 51 பேரில், லேசான அறிகுறி இருந்த 30 பேருக்கு வீட்டு தனிமையில் இருக்க அனுமதி வழங்கப்பட்டது. 16 பேரை வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

நோய் தொற்று அதிகம் உள்ள 5 பேரை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகளில் தீவிரமாக சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் குழு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News