செய்திகள்
கைது

பந்தநல்லூரில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது

Published On 2021-06-10 13:22 GMT   |   Update On 2021-06-10 13:22 GMT
திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர் பகுதியில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவிடைமருதூர்:

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர் பகுதியில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் வெட்டமங்கலத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் டிராக்டரில் மணல் ஏற்றி வந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் தினேஷ் டிராக்டரை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதேபோல் 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தவர்கள் வண்டியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். மேலும் மோட்டார் சைக்கிள்களில் மணல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த மூன்று பேரில் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். மற்ற இருவர் வண்டியை போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

போலீசார் பறிமுதல் செய்த டிராக்டர், 2 மாட்டு வண்டிகள், 3 மோட்டார் சைக்கிள்கள் அனைத்தையும் பந்தநல்லூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதில் குலசேகரநல்லூர் வெற்றிவேல் மட்டும் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய தினேஷ், சின்னராஜ், சபரிமுத்து, முத்துக்குமார், பிரகாஷ் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News