செய்திகள்
சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டசபை கூட்டம் வரும் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது

Published On 2021-06-09 13:47 GMT   |   Update On 2021-06-09 14:06 GMT
அலுவல் ஆய்வுக் குழு கூடி சட்டபேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்யும்.
சென்னை:

16வது சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடர் வரும் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார்.

ஆளுநர் உரைக்கு பின் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.



அலுவல் ஆய்வுக் குழு கூடி சட்டபேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்யும்.


சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்யும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
Tags:    

Similar News