செய்திகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
சென்னை:
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் மழை தூறியது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பத்தில் அவதிப்பட்டு வந்த மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் மழை தூறியது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பத்தில் அவதிப்பட்டு வந்த மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.