செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

ஆம்போடெரிசின் மருந்தை தமிழகத்திற்கு அதிகப்படுத்தி வழங்குக - பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

Published On 2021-05-31 23:17 GMT   |   Update On 2021-05-31 23:17 GMT
நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது.
சென்னை:

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழகத்திற்குத் தேவைப்படும் தடுப்பூசிகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளை அதிகரித்து வழங்க உடனடியாக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் வேகமாகப் பரவி வருவதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இதற்கான ஆம்போடெரிசின்-பி மருந்து (Liposomal amphotericin B14) மருந்து தட்டுப்பாடும் தமிழகத்தில் அதிகம் உள்ளது. தயவுசெய்து கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து ஆம்போடெரிசின்-பி மருந்து சப்ளையை அதிகரித்து பாதிக்கப்பட்டவர்கள் உயிரைக் காக்க உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News