செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் ஒரே நாளில் 1½ லட்சம் பேருக்கு தடுப்பூசி

Published On 2021-05-31 20:36 GMT   |   Update On 2021-05-31 20:36 GMT
தமிழகத்தில் நேற்று 4,877 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 62 ஆயிரத்து 375 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் நேற்று 4,877 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 62 ஆயிரத்து 375 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 52 ஆயிரத்து 154 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 18 ஆயிரத்து 522 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 1,225 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 2,693 பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் 87 ஆயிரத்து 781 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 89 லட்சத்து 32 ஆயிரத்து 852 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
Tags:    

Similar News