செய்திகள்
சென்னை உயர் நீதிமன்றம்

ஒரே கல்வியாண்டில் 2 பட்டப்படிப்பை அங்கீகரிக்க முடியாது- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2021-05-21 09:20 GMT   |   Update On 2021-05-21 09:20 GMT
இரட்டைப் பட்டப்படிப்பை அனுமதிப்பது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக யுஜிசி கூறியது.
சென்னை:

ஒரே கல்வியாண்டில் நேரடியாக தொலைதூர கல்வி மூலம் பெற்ற 2 பட்டங்களை அங்கீகரிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாணைக்கு வந்தது. அபபோது, ஒரே கல்வியாண்டில் இரட்டை பட்டப்படிப்பு மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்று யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரட்டைப் பட்டப்படிப்பை அனுமதிப்பது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறியது.

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஒரே கல்வியாண்டில் 2 பட்டங்கள் பெறுவதை மத்திய அரசு அனுமதிக்கும் வரை அங்கீகரிக்க முடியாது என கூறினர். தொலைதூர கல்வியாளர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் அனுபவம் கிடையாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News