செய்திகள்
கொரோனா வைரஸ்

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,263 பேருக்கு கொரோனா

Published On 2021-05-16 14:50 GMT   |   Update On 2021-05-16 14:50 GMT
திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,263 பேருக்கு கொரோனா உறுதியானது. 11 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 1,263 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 35,398 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 6,730 பேர் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 88, 84, 74, 73, 64, 59, 57, 53, 49, 39, 37 வயதுகள் உடைய 11 ஆண்கள் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 327 ஆக உயர்ந்தது.

அதே நேரம் மருத்துவமனையில் இருந்து 822 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 28,341 ஆகும்.
Tags:    

Similar News