செய்திகள்
ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறிய டீக்கடைக்கு சீல் வைப்பு
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறிய டீக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
தொண்டி:
திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள சோழகன் பேட்டை கிராமத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று பிற்பகல் 11.30 மணிக்கு மேல் டீக்கடையை அடைக்காமல் ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரம் செய்ததால் போலீசார் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் அந்த கடையை பூட்டி சீல் வைத்தார்.