செய்திகள்
கைது

திருவையாறு அருகே மணல் அள்ளிய வாலிபர் கைது

Published On 2021-05-15 09:25 GMT   |   Update On 2021-05-15 09:25 GMT
திருவையாறு அருகே அரசு அனுமதியில்லாமல் மணல் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் மற்றும் டிப்பரும் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவையாறு:

திருவையாறு அடுத்த தென்பெரம்பூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாரதிதாசன் மகன் ராசு(27). இவர் டிராக்டர் டிப்பரில் பனவெளி வெட்டாற்று பாலத்திலிருந்து மணலை ஏற்றிக்கொண்டு பனவெளி மெயின்ரோட்டில் வரும்போது நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின்சிசாரா மற்றும் போலீசார் மறித்து சோதனை செய்தனர். 

அப்போது அரசு அனுமதியில்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்ததால் டிராக்ரையும், டிப்பரையும் பறிமுதல் செய்து ராசுவை கைது செய்தனர்.

Tags:    

Similar News