செய்திகள்
கொரோனா வைரஸ்

ஜோலார்பேட்டை பகுதியில்மேலும் 75 பேருக்கு கொரோனா

Published On 2021-05-14 13:29 GMT   |   Update On 2021-05-14 13:29 GMT
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பொது மக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,355 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் ஜோலார்பேட்டை பகுதி்யை சேர்ந்த சந்தைக்கோடியூர், இடையம்பட்டி, காவேரிப்பட்டு, டி.வி.துரைசாமி நகர், பால்னாங்குப்பம், சின்னமூக்கனூர், ஆசிரியர் நகர், பாச்சால், முத்தனூர், அக்ராவரம், புள்ளானேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர், பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் திருப்பத்தூர் நாட்டறம்பள்ளி மற்றும் அக்ராவரம் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர் மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பொது மக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News