செய்திகள்
கள்ளக்குறிச்சி அருகே விவசாயி தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
வயிற்றுவலி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ்(வயது 57) விவசாயி. சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்த இவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி காமராஜ் பரிதாபமாக இறந்தார்.