செய்திகள்
கொரோனா குறித்து ஆலோசனை- அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அனைத்துக் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் அதிமுக சார்பில் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, முனிரத்னம், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.