செய்திகள்
கோப்பு படம்

தொழிலாளர்களுக்கு கொரோனா- திருப்பூரில் 6 பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ‘சீல்’

Published On 2021-05-13 10:36 GMT   |   Update On 2021-05-13 16:28 GMT
திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் 200 பேருக்கு மேல் பணியாற்றும் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்படுகிறது.

பரிசோதனையில் 3 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தை மூடி ‘சீல்’ வைக்க அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர். அதன்படி கடந்த 2 நாட்களில் 6 பனியன் ஏற்றுமதி நிறுவனங்களை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

குளத்துபுதூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறு வனத்தில் 295 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சிறு பூலுவப்பட்டியில் உள்ள பனியன் நிறுவனத்தில் 367 பேருக்கு சோதனை மேற் கொண்டதில் 33பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.

மங்கலம்ரோடு கோழி பண்ணை பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் 232 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில்8 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

ஆசர்நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் 150 பேருக்கு சோதனை செய்ததில் 19 பேருக்கு கொரோனா இருந்தது. ஆண்டிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் 400 பேருக்கு சோதனை மேற்கொண்டதில் 32 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

பல்லடம் ரோடு கோகுல கிருஷ்ணா நகரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் 800 தொழிலாளர்களுக்கு சோதனை நடந்ததில் 23 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 6 பனியன் ஏற்றுமதி நிறுவனங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் மூடி ‘சீல்’ வைத்தனர். அந்த பகுதியை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News