செய்திகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகள் திறப்பு
முழு ஊரடங்கில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு, அதன் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
பெரம்பலூர்:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய தேவைகளை பொதுமக்கள் பூர்த்தி செய்யும் பொருட்டு மதியம் 12 மணி வரை சிறிய அளவிலான கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மேலும் தளர்வாக பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளையும் மதியம் 12 மணி வரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகள் திறக்கப்பட்டன. அதன் உரிமையாளர்கள் தமிழக அரசின் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி வியாபாரம் செய்தனர். பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றி பழங்கள், நாட்டு மருந்துகளை வாங்கி சென்றனர். முழு ஊரடங்கில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு, அதன் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய தேவைகளை பொதுமக்கள் பூர்த்தி செய்யும் பொருட்டு மதியம் 12 மணி வரை சிறிய அளவிலான கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மேலும் தளர்வாக பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளையும் மதியம் 12 மணி வரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகள் திறக்கப்பட்டன. அதன் உரிமையாளர்கள் தமிழக அரசின் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி வியாபாரம் செய்தனர். பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றி பழங்கள், நாட்டு மருந்துகளை வாங்கி சென்றனர். முழு ஊரடங்கில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு, அதன் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.