செய்திகள்
தற்கொலை

விழுப்புரத்தில் கொரோனா அச்சத்தில் விவசாயி தற்கொலை

Published On 2021-05-13 05:50 GMT   |   Update On 2021-05-13 05:50 GMT
விழுப்புரத்தில் கொரோனாவுக்கு பயந்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் மருதூர்மேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 50). விவசாயி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிபட்டு வந்தார். எனவே தனக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கும் என கருதி அரசு ஆஸ்பத்திரியில் சளி மாதிரி கொடுத்திருந்தார்.

எனவே பரிசோதனை முடிவில் எப்படியும் கொரோனா தொற்று இருக்கும் என முடிவு வரும். எனவே வாழ்வதைவிட தற்கொலை செய்வது என அவர் கருதினார். அதன்படி சிவக்குமார் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவக்குமாருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

ஆனாலும் அவர் கொரோனாவுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News