செய்திகள்
தற்கொலை

மணப்பாறை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2021-05-11 13:42 GMT   |   Update On 2021-05-11 13:42 GMT
மணப்பாறை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் அருகே உள்ள ஒரு நிழற்குடையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் அருகில் பூச்சி மருந்து(விஷம்) பாட்டில் இருந்தது. இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதைத்தொடர்ந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News